இலங்கையில் அறிமுகமாகியது புதிய வகை முச்சக்கர வண்டி…!! பெரும் மகிழ்ச்சியில் சாரதிகள்..!
சூரிய சக்தியால் இயங்கும் முதலாவது முச்சக்கரவண்டி இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.இந்த முச்சக்கர வண்டியை சுற்றுச்சூழல் விரும்பி என அறிமுகப்படுத்தி உள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான அறிமுக விழா கடந்த மாதம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர் தலைமையில் இடம்பெற்றது. கொரிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
எரிபொருள் அற்ற சூரிய மின்கலத்தின் சக்தியுடன் பயணிக்கும் வகையில் இவ் வாகனம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் உலக மாற்றத்திற்க்கேற்ப அரிய கண்டுபிடிப்பாகவே இதனை இலங்கை விஞ்ஜானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எனவே இத்தகைய சூரிய ஒளியில் சேமிக்கப்பட்ட சக்தியின் மூலம் போதியளவு மின்சாரம் சேமிக்கப்பட்டு இவ் முச்சக்கர வண்டியில் பயணிக்கலாம். எரிபொருள் பயன்பாடும் குறைவு.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology news.