இலங்கை வாழ் ரயில் பயணிகளுக்கு அடித்தது அதிஷ்டம்..!! இலங்கை வரும் நவீன வடிவமைப்பில் உருவான 9 ரயில்கள்..!!
சீனாவின் ரோலிங்-ஸ்டாக் தயாரிப்பாளரான சி.ஆர்.ஆர்.சி கிங்டாவோ சிஃபாங் கோ லிமிடெட் நிறுவனம் இலங்கைக்கு ஒன்பது டீசல் ரயில்களை தயாரித்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையுடன் 90 ரயில் கார்கள் பொருத்தப்பட்ட புதிய வகை டீசல் ரயில்களின் உற்பத்தி முடிவடைந்துள்ளன. இந்த நிறுவனம் இலங்கைக்கு தயாரித்த டீசல் ரயில்களில் நான்காவது தொகுதி இது ஆகும்.
இந்த ரயில்கள் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது இலங்கையில் பயன்படுத்தப்படும் ரயில்களுடன் ஒப்பிடும்போது, புதிய ரயில்களில் அதிக குளிரூட்டப்பட்ட வசதிகள் உள்ளன, மேலும் பயணிகள் தகவல் அமைப்பு, எல் சி டி தொலைக்காட்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட மலசலகூட வசதிகள் போன்ற வசதிகளுடன் அவை உள்ளன.
இலங்கையில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதத்தை தாங்கும் வகையில் புதிய தொழில் நுட்பங்குடன் இந்த புதிய ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.முன்னதாக, நிறுவனம் 43 ரயில்களில் மூன்று தொகுதிகளை இலங்கைக்கு ஏற்றுமதி செய்தது, இது நாட்டின் மொத்த ரயில்களில் அரைவாசிக்கும் மேலானதாகும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பார்வையிட எமது முகநூல் புத்தக பக்கத்தை (Facebook Page) லைக் செய்யவும்.[wpdevart_like_box profile_id=”1865134133798752″ connections=”show” width=”600″ height=”200″ header=”large” cover_photo=”show” locale=”en_US”]

Click here to contact us
Click here to find our Facebook fan page.
Click here to see more technology newses.